ஆடாத ஆட்டமெல்லாம்

Friday, August 10, 2012


ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்.
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே போகின்றோம்.

மனிதன் என்னும் வேடம் போட்டு,
மிருகமாக வாழ்கின்றோம்.
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து,
தீமைகளை செய்கின்றோம்.

காலம் மீண்டும் திரும்பாதே!
பாதை மாறி போகாதே!!
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

ஹேய்.. கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே!
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்,
காதல் வந்த பின்னாலே, போதையாட்டமே!

பேருக்காக ஒரு ஆட்டம்,
காசுக்காக பல ஆட்டம்.
எட்டு காலில் போகும்போது,
ஊரு போடும் ஆட்டமே!

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?
நீ கொண்டு வந்ததென்ன?
நீ கொண்டு போவதென்ன?
உண்மையென்ன உன்னக்கு புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!!
வந்தவனும் வருபவனும்.. நிலைப்பதிலையே!!
ஏன்.. நீயும் நானும் நூறு வருஷம் இருபதில்ல பாரு.

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா?



திரைப்படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் சங்கர் ராஜா
வரிகள் சினேகன்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: