வா வா நிலவ புடிச்சி தரவா

Sunday, August 05, 2012




வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

வானத்தில் ஏறி ஏனைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா

கவலை நம்மை சிலநேரம் கூறுபோட்டு கொண்டாட்டும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதியும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா


ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று புதியதாய் உருவாகும்

வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...


திரைப்படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ராகுல் நம்பியார்


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: