பூங்காற்றிலே உன் சுவாசத்தை

Sunday, August 05, 2012




.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்

கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

திரைப்படம்: உயிரே
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், ஸ்வர்ணலதா

நான் எப்படி இந்த பாடலை என் வலையில் இதுநாள் வரை பதியாமல் இருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்நாளில் இதுவரை கேட்ட பாடல்களிலும் இனிமேல் கேட்கப்போகும் பாடல்களிலும் சரி, இந்த பாடலைத்தான் என் உயிர் என்றும் முதலாய் சொல்லும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் கண்ணீரையும் பல நினைவுகளையும் எனக்கு தந்துவிட்டு செல்லும் இந்த பாடலை என் மரணத்திலும் மறக்கமுடியாத பாடல் என்று சொல்வேன்...

- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

1 Comments:

Dinesh Kumar A P said...

yenaku mikavum piditha padal ethu....