வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

Saturday, August 15, 2020


வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!

நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக

அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!

நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

 

- பாரதியாரின் தேசிய கீதங்கள் நூலிலிருந்து..

 

* தினேஷ்மாயா *

0 Comments: