செந்தமிழ் நாடெனும் போதினிலே

Saturday, August 15, 2020



செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனை நதி - என

மேவிய யாறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று

மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்

எத்தனையுண்டு புவிமீதே - அவை

யாவும் படைத்த தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட

மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்

மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய

தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்

பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

 

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே


- பாரதியாரின் தேசிய கீதங்கள் நூலிலிருந்து..


* தினேஷ்மாயா *

0 Comments: