முகமூடி

Wednesday, August 05, 2020



அப்பப்பப்பா !!!

மனிதர்கள் தான் எவ்வளவு ஆபத்தானவர்கள் !

உலகில் பச்சோந்தி விலங்கினம்தான்

தன் சூழ்நிலைக்கேற்ப தன் உடலில் நிறத்தை 

மாற்றி அமைத்துக்கொள்ளும்.

ஆனால், இந்த மனிதர்கள் அதைவிட 

கைதேந்தவர்கள்.

பிறக்கையில் முகமூடி எதுவுமின்றி பிறந்து

வளர்கையில் அந்த கலையை நன்கு கற்றறிகிறான்.

நம்முடன் பேசும் ஒருவர் எந்த முகமூடி அணிந்து 

பேசுகிறார் என்பதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது.

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனத்திலும்

நல்லெண்ணமும் உண்டு, தீயெண்ணமும் உண்டு.

ஆனால் அந்த இருளில் என்ன மறைந்திருக்கிறது என்பது

அவர்களுக்கே வெளிச்சம் !!

* தினேஷ்மாயா *


0 Comments: