உறவுகள் தொடர்கதை...

Tuesday, January 10, 2017


உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

படம்: அவள் அப்படித்தான்.
இசை: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.

சமீபத்தில் என் நண்பன் சொல்லி இந்த பாடலை கேட்டேன். இளையராஜா அவர்கள் ஏன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்பதற்கு அர்த்தம் கிடைக்கும் வண்ணம் இந்த பாடல் இருந்தது. என்ன ஒரு ஆளுமை. அருமையான இசையமைப்பு...

* தினேஷ்மாயா *

0 Comments: