இப்படியும் இருக்கலாமோ ?

Friday, January 13, 2017



உலகின் மாபெரும் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழ்பவை அமெரிக்கா மற்றும் இரசியா.. இவர்களுக்கிடையில் பனிப்போர் 45 ஆண்டுகளாக நடந்து வந்தது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் பாதாளம் தொடங்கி விண்வெளி வரை நீண்டிருந்தது..

அந்த பனிப்போர் முடிந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் உலகின் மாபெரும் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இவ்விரு நாடுகளும் எண்ணற்ற முயற்சிகளை செய்துக்கொண்டே வருகின்றன. ஆயினும், நேர் வழியைவிட குறுக்குவழியில்தான் இவர்கள் பயணப்பட்டது அதிகம் என்பது சரித்திரத்தை திரும்பி பார்த்தால் புரியும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அவர்களும் இந்த பனிப்போரின் இன்னொரு பரிணாமமாக நான் கருதுகிறேன்.

அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாத இரசியா, தன் ஆதரவாளர் ஒருவரை அமெரிக்காவின் அதிபராக வந்தால் தங்கள் காரியம் அனைத்தையும் சாதித்துக்கொள்ளலாம் என்று நினைத்து செய்த காரியம்தான் இதுவோ என நினைக்க தோன்றுகிறது.

எது எப்படியானாலும், மூன்றாம் உலகப்போர் வராமல் இருந்தால் சரி..

* தினேஷ்மாயா *

0 Comments: