தமிழ் வாழ்க..

Sunday, January 22, 2017

சமீபத்தில் தமிழகத்தில் நடைப்பெற்று வரும் அறப்போராட்டம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த தன்னெழுச்சி போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும். மாணவர்களின் சக்தியை மாணவரளே அறியாமல் இருந்தனர். இன்று அவர்களும் அறிந்து தங்கள் சக்தியை உலகுக்கும் உணர்த்தியுள்ளனர். சில கருப்பு ஆடுகள் தங்கள் கருத்தை தெரிவிக்கிறேன் என்று பிரிவினையையும் வெறுப்பையும் விதைத்தாலும் எம் சிங்கங்கள் அவற்றுள் சிக்காமல் சீறி செல்வது மகிழ்ச்சி. இந்த அறவழிப்போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் இருந்துவிடக்கூடாது. இந்த மாணவர் எழுச்சியை ஒருங்கிணைத்து இது என்றென்றும் தொடர ஒர் தலைமை வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வந்து அரசாங்கத்தில் பங்குபெற்று நாட்டை சுத்தம் செய்ய வேண்டும். நம் அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவான வல்லரசு இந்தியா 2020 தமிழகத்தில் இருந்தே ஆரம்பமாகட்டும். நம் அடுத்த இலக்கு 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்.

மாணவர்கள் அரசியலில் வரும் நிலைவந்தால், என் அரசாங்க பணியை விட்டு நானும் மக்களுக்காக அரசியலில் இறங்கவும் தயாராக இருக்கிறேன். இப்போராட்டம் முடிந்ததும், மாணவர்களின் அரசியல் எழுச்சிக்கு ஒரு பிள்ளையார் சுழி போட ஒரு வழியை தேடிக்கொண்டு இருக்கிறேன்..

தமிழ் வாழ்க. தமிழினம் வெல்க..

இனியொரு விதி செய்வோம்..

* தினேஷ்மாயா *

0 Comments: