மாயா !!

Monday, January 09, 2017



உன் கண்ணை பார்த்தால் - அங்கே
ஒரு கவிஞன் பிறப்பான்..
உன் கண்களை பார்த்துக்கொண்டே இருந்தால் - அங்கே
ஒரு கவிஞன் இறப்பான்..

உன்னை புராணம் என்று மேதாவி படிப்பான்..
நீ சிலையென்று சிற்பி உன்னை வடிப்பான்..

தாளம் நீயென்று நாடோடி ஆனந்தகூத்தாடுவான்..
ராகம் நீயென்று இசைக்கவி தெய்வீகமாய்
பாடுவான்..

உனைப்பாட வார்த்தைகள் ஏது?
உனக்கில்லை இவ்வுலகில் ஈடு..

உன்னால் கிறுக்கனானேன் - இதை
இங்கு கிறுக்கலானேன் !

- தினேஷ்மாயா

0 Comments: