ஏழுமலையான் மகிமை

Sunday, January 22, 2017


நேற்று என் பெற்றோர்களுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தேன்.

15 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் என்னை திருப்பதி அழைத்து வந்தனர். இன்று, 15 ஆண்டுகள் கழித்து அவர்களை திருப்பதி அழைத்து வந்து இறைவனை தரிசிக்க நான் காரணமாக இருப்பதற்கு அந்த ஏழுமலையானுக்கு நன்றி..

ஏழுமலையான் தரிசனம் கண்டு வெளியே வரும்போது அம்மா அப்பா இருவர் கண்களிலும் ஆனந்தம் சொல்லமுடியாத மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது. அவர்களின் மகிழ்ச்சியை கண்டு எனக்கு பேரானந்தம். பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாக இருப்பதைவிட வேறென்ன மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு இருந்துவிடப் போகிறது ?

இது வழக்கமாக நடக்கும் விஷயம் போல தோன்றினாலும், கீழே திருப்பதியில் இருந்து மேலே திருமலை வந்து ஏழுமையான் தரிசனம் கண்டு திரும்பி ஊர் செல்லும்வரை பற்பல அதிசயங்கள் நடத்திகாட்டினார் பெருமாள். அதை இங்கே பதிந்தாலும் பலருக்கு புரியாது. ஆத்மார்த்தமாக அவன் அதிசயங்களில் நான் அவனது மகிமையை கண்டு மனம் இலயித்தேன் என்பதைத்தவிர ஏதும் சொல்ல வார்த்தைகளில்லை..

ஓம் நமோ வெங்கடேசாய

ஓம் நமோ நாராயணாய

* தினேஷ்மாயா *

0 Comments: