2017 பயணம்

Monday, January 09, 2017



என் 2017-ஆம் ஆண்டின் பயணம் இராமேஸ்வரத்தில் இருந்து துவங்கியது.
இராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி மற்றும் பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி தரிசனம் கண்டு, மதுரை வந்தேன். மீனாட்சி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்துவிட்டு அங்கு சுந்தரானந்தர் சித்தரின் ஜீவசமாதியையும் தரிசித்துவிட்டு, திருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் ஆலயத்தில் உள்ள மச்சமுனி சித்தர் ஜீவசமாதி தரிசித்து, பின் திருப்பரங்குன்றம் முருகனையும் தரிசித்தேன்.

வைகுண்ட ஏகாதசி அன்று, அழகர் கோவில் சென்று, பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி, கள்ளழகர் இருவரையும் தரிசித்து, பழமுதிர்ச்சோலை முருகனை வணங்கி பின் அழகர் மலை உச்சியில் இருக்கும் இராமதேவர் ஜீவசமாதிக்கு மலை ஏற்றம் மேற்கொண்டு சித்தரின் தரிசனம் கண்டு இன்புற்று பின்னர் வீடு திரும்பினேன்.


* தினேஷ்மாயா *

0 Comments: