கோடையில மழ போல

Saturday, March 29, 2014



கோடையில மழ போல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலையிளங்கதிராக கண்ணருகே நீயிருக்க
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ

காரியம் நூறு செய்து 
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடம் அறிந்து 
செல்லும் பாதைகள் முடிவதில்லை
ஆலயம் தேடிசென்று 
செய்யும் பூசைகள் தேவையில்லை
உந்தன் கைவிரல் தொடும்பொழுது 
துன்பம் தொலைவிலும் வருவதில்லை
உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
ரெண்டு இருதயம் கலந்துவிட

மாறிடும் யாவும் என்று
சொல்லும் வார்த்தையில் நெசமுமில்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை
ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும்
அன்பு தீ என்றும் அணைவதில்லை
உருவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து தொட
இருளெது ஒளியெதுவோ
ரெண்டு இருதயம் கலந்துவிட

கோடையில் மழ போல
என்னுயிரு நீ இருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன்கூட
காலையிளங்கதிராக கண்ணருகே நீயிருக்க
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ


படம்: குக்கூ
இசை: சந்தோஷ் நாரயணன்
வரிகள்: யுகபாரதி
குரல்: விஜயலஷ்மி, கல்யாணி, பிரதீப்

0 Comments: