கடற்கரை

Sunday, March 16, 2014



கடற்கரைக்கு -

நான் நடைப்பழகாத குழந்தையாக இருக்கும்போது

வந்திருக்கிறேன்..

நடக்கப்பழகிய சின்னஞ்சிறுவனாய்

வந்திருக்கிறேன்..

பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும்

வந்திருக்கிறேன்..

பள்ளிக்கூட சுற்றுலாவில்

வந்திருக்கிறேன்..

கல்லூரி நண்பர்களுடன்

வந்திருக்கிறேன்..

காதலியுடன் காதலனாக

வந்திருக்கிறேன்..

என் காதலி மனைவியானதும் அவளுடன் கணவனாக

வந்திருக்கிறேன்..

என் குழந்தையுடன்

வந்திருக்கிறேன்..

என் பிள்ளை வளர்ந்ததும் அவனுடன்

வந்திருக்கிறேன்..

என் பேரப்பிள்ளைகளோடு

வந்திருக்கிறேன்..

வயதான காலத்தில் கையில் தடியோடு தடுமாறிய நடையில்

வந்திருக்கிறேன்..

நடக்கவே முடியாதபோது சக்கர நாற்காலியில் என்னவளுடன்

வந்திருக்கிறேன்..

கடையில் இன்று அஸ்தியாய் 

வந்திருக்கிறேன்..

ஒவ்வொரு முறையும் கடற்கரையில் விளையாடிவிட்டு சென்றிடுவேன்.

இம்முறை கடலோடு கலந்துவிடுகிறேன்..



* தினேஷ்மாயா *

0 Comments: