கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

Sunday, December 08, 2013



கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்


வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக்கேளு
உண்மைகள் சொன்னேன்

படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

ஒருமுறை என் பிறந்தநாளுக்கு அவள் எனக்கு கொடுத்த பரிசு இந்த பாடல்தான். அவள் மடியில் நான் படுத்துக்கொண்டேன். எனக்காக இந்தப்பாடலை அவள் பாடினாள். பாடலை கேட்டுவிட்டு கண்ணீரோடு விடைப்பெற்று வந்தேன். இந்த பாடலை கேட்டதும் அப்போது கண்ணீர் ஏன் வந்தது என்பது இன்றும் எனக்கு தெரியவில்லை....

* தினேஷ்மாயா *

0 Comments: