ஒத்தையில உலகம் மறந்து போச்சு

Tuesday, December 24, 2013



ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

அரட்டைகள் அடித்தோமே
குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே
இப்போது பாதியில் பிரிந்தோமே

இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை 
யார் அதை அறிவாரோ

அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனி மேல் நானே தனியாள் ஆனேன்
நட்பு என்ன நடிப்போ

நமக்கென இருந்தோமே 
தினசரி பிறந்தோமே
திசைகளாய் பிரிந்தோமே
கல்யாண காட்டினில் தொலைந்தோமே

பனித்துளி மலரோடு 
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது
என்றே நீ சொன்னது மறக்காது

நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த

திரைப்படம்என்றென்றும் புன்னகை
பாடியவர்கள்திப்புஅபய்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்கபிலன்


இன்னமும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. படத்தின் விமர்சனம் படித்தேன். நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் படத்தை பார்த்துவிட்டு பதிவு செய்கிறேன்.
இந்த பாடல் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கேட்டேன். மற்ற பாடல்களைவிட இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நட்பின் பிரிவில் இருக்கும் வலியை சொல்கிறது இப்பாடல். காதலின் பிரிவில் இருக்கும் வலியை தான் அதிகம் பாடலாய் கேட்டிருக்கிறோம். அத்தி பூத்தார்போல நட்பின் பிரிவில் இருக்கும் வலியை வெளிப்படுத்தும் விதமாக வரும் பாடல்களில் இந்த பாடலும் சிறப்பான ஒன்று.

* தினேஷ்மாயா *

0 Comments: