எனை சாய்த்தாலே

Thursday, December 26, 2013



எனை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி வீழ்வேனோ முழுதாக
இதழ் ஓரத்தில் நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ.........
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத்தான் பார்த்தேன்

நடக்கிறவரை நகர்கிற தரை
அதன்மேல் தவிக்கிறேன்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போல வானம்
அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப் போக எண்ணும்
கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டி செல்ல கண்டேன்

என்னை சாய்த்தாலே
உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி வீழ்வேனோ முழுதாக

மாலை வந்தால் போதும்
ஒரு 110-ல் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும்
உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கொண்டேன்

எனை சாய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி வீழ்வேனோ முழுதாக
இதழ் ஓரத்தில் நகை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ.........
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேறத்தான் பார்த்தேன்

நடக்கிறவரை நகர்கிற தரை
அதன்மேல் தவிக்கிறேன்
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்..


படம்: என்றென்றும் புன்னகை

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: ஹரிஹரன்,ஸ்ரேயா கோசல்


* தினேஷ்மாயா *

0 Comments: