என்மேல் விழுந்த மழைத்துளியே

Sunday, December 08, 2013




என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல்
உனக்குள் தானே நானிருந்தேன்

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணைத் திறந்தால் நிரிருக்கும்
என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசையிருக்கும்
என் உயிரைத்திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் 
என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என்மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ?
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ?
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ?

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர்போல்
உனக்குள் தானே நானிருந்தேன்

என்மேல் விழுந்த மழைத்துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

திரைப்படம் : மே மாதம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து


* தினேஷ்மாயா *

0 Comments: