ஒரு வெட்கம் வருதே வருதே

Tuesday, February 24, 2015


ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பர பரபரவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வர கரைத் தாண்டிடுமே

மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே கோர்க்கிறேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம்
அனைவரும் கேட்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே
வர வர வர கரைத் தாண்டிடுமே

காற்றில் கலந்து நீ
என் முகத்திலே ஏனோ மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே வரனும் எதிரினிலே
வெயிலினில் ஊர்கோலம் இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே துடிதுடித்திடும் மனமே
வர வர வர கரைத் தாண்டிடுமே

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
வரிகள் : தாமரை

* தினேஷ்மாயா *

0 Comments: