ஜகடதோம் ஜகடதோம்

Thursday, February 26, 2015


ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்
ஜகடதோம் ஜகடதோம் எழுதுவோம் சரித்திரம்
நடந்து நடந்து கால்தேயலாம்
விழித்து விழித்து கண்மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்

இருட்டை விரட்ட ஒரு சூரியன் 
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம் 
நினைத்த கனவு கைக்கூடலாம் கூடலாம்

ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்

பலக்கோடி காலங்கள் மண்ணுக்குள் வாழ்ந்தாலே 
கரித்துண்டு வாழ்க்கை ஒரு நாள் வைரமாக மாறும் 
வரலாற்றில் எந்நாளும் வலியின்றி வாழ்வில்லை 
வலிதானே வெற்றியில் ஏற ஏணி ஒன்று போடும் 

தீமையைத் தீயிட தீமையை நாடிடு
குற்றம் அதில் இல்லை
தோட்டத்தைக் காத்திட
வேலியில் முட்களை வைத்தால் தவறில்லை

கண்ணில் கார்காலம் ஓ.. இன்றே மாறாதோ
நெஞ்சில் பூக்காலம் ஓ.. நாளை வாராதோ
நடந்து நடந்து கால்தேயலாம்
விழித்து விழித்து கண்மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்

இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கைக்கூடலாம் கூடலாம்

ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்

முடியாத பாதைதான் கிடையாது மண்மீது
முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்த்திடாது
விடியாத நாட்கள்தான் கிடையாது விண்மீது
விழி சிந்தும் ஈரம் பட்டு நெஞ்சம் மூழ்கிடாது

ஆலயம் என்பது கோபுர வாசலும் சிலையும் மட்டும்தான்
அதைவிட மேலெது ஆண்டவன் வாழ்வது
நல்லோர் உள்ளம்தான்

தாய்மை என்றாலும் ஓ.. உன்போல் ஆகாது
உண்மை நெஞ்சம் தான் ஓ.. உன்னைபோல் ஏது

நடந்து நடந்து கால்தேயலாம்
விழித்து விழித்து கண்மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்
இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கைக்கூடலாம் கூடலாம்

ஜகடதோம் ஜகடதோம் வாழ்க்கையே போர்க்களம்
ஜகடதோம் ஜகடதோம் எழுதுவோம் சரித்திரம்

படம்: தெய்வத்திருமகள்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
வரிகள்: நா.முத்துகுமார்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாயா, ராஜேஷ்

* தினேஷ்மாயா *

0 Comments: