விவசாயி

Wednesday, October 09, 2013


எல்லோருக்கும் பல கனவுகள் இலட்சியங்கள் இருக்கும். எனக்கும் பல கனவுகள் இருக்கிறது. ஆனால், என் மனதிற்கு மிகவும் பிடித்த விஷயங்கள் மூன்று இந்த மூன்றில் எதையாச்சும் ஒன்றை என் வாழ்க்கை பாதையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருதுவேன். முதலில் கணக்கு ஆசிரியர். இரண்டாவது திரைப்பட இயக்குனர். மூன்றாவது விவசாயி.

என் பாக்கியம் என்னவோ தெரியவில்லை, விவசாய குடும்பத்தில் பிறக்கவில்லை நான். என் முன்னோர்கள் கூலித் தொழிலாளிகளாகவே வாழ்ந்துவிட்டனர். அதனால் விவசாயம் செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியதே இல்லை. ஆனால், என் கடைசி காலத்தில் எவ்வளவு கஷ்டமானாலும் சரி, விவசாயம் செய்து பிழைப்பதென்று முடிவெடுத்திருக்கிறேன். என்னை வாழவைத்த இம்மண்ணிற்கு என்னால் இயன்ற கைம்மாறு இதுவாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: