தன்னந்தனியாய் !!

Wednesday, October 30, 2013


என் வலைப்பக்கத்தை ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. என்னுடன் அவள் இருந்த போது என் வலைப்பக்கம் தினம் தினம் நிரம்பிவழிந்தது. ஆனால் அவள் பிரிந்து சென்ற சில மாதங்கள் என் வலையை சரிவர பிண்ண என்னால் முடியவில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். இனி என் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். என்னை தடுக்க இனி எதுவும் இல்லை. தன்னந்தனியாய் இருக்கிறேன். அவள் பிரிந்து சென்ற ஒன்றரை ஆண்டுகள் ஆகியபின்னரும் என் வலையில் சென்ற வருடத்தைவிடவும் அவள் என்னுடம் இருந்தபோது பதிவு செய்ததைவிடவும் இந்த வருடம் அதிகம் பதிவு செய்திருக்கிறேன். இதுவே போதும் என்னால் அவள் இல்லாமலும் என் வாழ்க்கையை என்னால் வழிநடத்தி செல்லமுடியும் என்பதற்கு. வலிகள், நினைவுகள் ஆயிரம் ஆயிரம் வரும் செல்லும். அதற்காக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்தால் எப்படி. வாழ்க்கையைப் பார்த்து நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

* தினேஷ்மாயா *

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... தொடர்க... வாழ்த்துக்கள்...

SabanaSuthan said...

Good