கனவெல்லாம் நீதானே

Wednesday, October 30, 2013



கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே..
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே..

சாரல் மழை துளியில், உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்..
நாணம் நான் அறிந்தேன், கொஞ்சம் பணி பூவாய் நீ குறுக..
எனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி..
நிஜம் புரியாத  நிலை  அறிந்தேன் , எதுவரை சொல்லடி..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
நினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே..

தேடல் வரும் பொழுது, என் உணர்வுகளும் கலங்குதடி..
கானலாய் கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்..
இணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே..
தவித்திடும் போது ஆறுதலை உன்மடி  சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
நினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..
பார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே..

கனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்..

 From a Private Album By Dilip Varman..

சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். நான்கு நாட்களில் 400 முறை கேட்டிருப்பேன் இந்த பாடலை. மனதுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வரிகள் வாட்டி வதைக்கிறது. இசையும் குரலும் அனைத்தும் அருமை. பல நாட்களுக்கு பிறகு மனதையும் உயிரையும் வருடும் பாடல்.

http://download.tamiltunes.com/songs/Private%20Albums/DhilipVarman/Kanavellam%20Neethane%20-%20TamilWire.com.mp3

மேலே இருக்கும் இணைப்பில் இந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

* தினேஷ்மாயா *

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் அருமை... நன்றி...