சாம்பார் சாதம்..

Tuesday, September 28, 2010


நீங்க தமிழ்நாட்டில் மதிய நேரத்தில் எந்த ஓட்டலுக்கு போனாலும் கண்டிப்பா அங்கே சாப்பாடு கிடைக்கும்..

1. சாதம் - ஒரு சில ஓட்டல்களில் அளவு சாப்பாடு கிடைக்கும் இன்னும் சில ஓட்டல்களில் முழு சாப்பாடு கிடைக்கும்.. 

2. சாம்பார்

3. ரசம்

4. காரக்குழம்பு

5. தயிர் / மோர்

6. அப்பளம்

7. ஊறுகாய்

8. கேசரி / பாயசம்

9. பொறியல்

10. கூட்டு

நிச்சயம் இவைகளில் பெரும்பலானவை உங்களில் தட்டில் இருக்கும். மதிய நேரத்தில் பசியோடு இருக்கும்போது இப்படி வகைவகையாக உணவு சாப்பிடுவது யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க. நான் செத்தாலும் தமிழ்நாட்டில் தான் சாகனும்னு என் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். இங்க மட்டும்தாங்க சாப்பாடு கிடைக்குது. வெளியே எங்கு சென்றாலும் அந்த ஊர் சாப்பாதுதான். அதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா. என்னதான் சாப்பிட்டாலும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் ஒருபிடி சாதம் சாப்பிடுவதற்கு ஈடாகுமா என்ன... இதுதான் நம்ம தமிழனின் சிறப்பு உணவு.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச உணவு...


அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: