யாரடா மானிடா நீ…

Tuesday, September 28, 2010




யாரடா மானிடா நீ…
வெறும் சதையும் எலும்பும்
போர்த்தப்பட்ட வெற்றுடம்பா நீ…
உணர்வை மதியாமல்
உணர்ச்சிகளை மட்டும் வளர்ப்பவனா நீ…
சகமனிதனை போற்றாமல்
பணத்தை மட்டுமே போற்றுபவனா நீ…
மனிதநேயத்தை மறந்துவிட்டு
மிருகமாய் மாறிவருபவனா நீ…
படைத்தவனை இகழ்ந்து
அவனுக்கே பரீட்சை நடத்துபவனா நீ…

யாரடா மானிடா நீ…
சாதி சமயம் எனும் பெயரால்
சண்டை போடுபவனா நீ…
சடங்குகளை வளர்த்துவிட்டு
சமூகத்தை முடக்குபவனா நீ…
உழைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு
ஊதியம் தர யோசிப்பவனா நீ…
சமூக அவலங்களை
கண்டு கொள்ளாத குருடனா நீ…
ஏழைகளின் குரலுக்கு
செவி சாய்க்காத செவிடனா நீ…

யாரடா மானிடா நீ…
தன் இனத்தையே
அழிக்கும் அரக்கனா நீ…
உள்ளம் என்பதை
தொலைத்துவிட்டு வாழ்பவனா நீ…
தீவிரவாதியாய் மாறி
உலகை அழிக்கும் எமனா நீ…
புறங்கூறி வாழ்வதில்
முதலிடம் பிடித்தவனா நீ…
எவ்வளவுதான் அறிவுரை சொன்னாலும்
காதில் வாங்காத மனிதனா நீ….

யாரடா மானிடா நீ… ???


அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: