மழையே வாராய்...

Tuesday, September 28, 2010




மழையே...
வருவாயோ எந்தன்
பூமியில்…
உன் வருகைக்காக
காத்திருக்கிறது
என் மனமும்
என் மண்ணும்..
நீ இல்லாததால்
வாடிபோயிருக்கிறது
என்னுயிர் பயிர்கள்…
உனைக் காணாததால்
வெடித்து கிடக்கிறது
என்தாய் பூமி…
உன் வருகையை
எதிர்பார்த்து எதிர்பார்த்தே
ஓடி போய்விடுகிறது
உழும் நாட்களெல்லாம்…
உன் ஒருவனின்
வருகையால் –
உலகமே செழுமையாகுமே…
நீ என்ன நான் காதலிக்கும் பெண்ணா ?
ஏன் உன் வருகையை
தவிர்க்கிறாய்…
நான் ஒன்றும் உன்னை
காதலிக்க மாட்டேன்…
உன்னில் நனைவதோடு
நிறுத்திக் கொள்கிறேன்…
எனக்காகவாவது இம்மண்ணில்
வருவாயோ….


அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: