விவசாய போராளி !

Saturday, July 11, 2020



எந்தவொரு விவசாயியும், எவ்வளவு வறுமை வந்தாலும் தன் விதை நெல்லை பொங்கி திண்ண மாட்டான். ஆனால், அவனை சூழ்ந்த வறுமையும் பசி என்னும் அரக்கனும், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தாரையும் மூழ்கடிக்கும் அந்த தருணத்தில் அவன் வேறு வழியின்றி அந்த விதை நெல்லை பொங்கி வைத்து அவர்களுக்கு உணவு படைப்பான்.

ஆனால், அவன் அந்த உணவை உண்ண மாட்டான். அந்த விதை நெல்லை அவர்கள் குடும்பத்தார்கள் திண்ணும் அந்த வேளையில் இவன் குடிந்த அந்த பூச்சிமருந்து இவன் சீவனை பரலோகத்திற்கு பக்கத்தில் கொண்டு போயிருக்கும்...

கொண்ட கொள்கைக்காக உயிர்விடும் ஒவ்வொருவரும் போராளியே..

அப்படி பார்த்தால் - இந்த விவசாயியும் ஒரு போராளியே !!

* தினேஷ்மாயா *

0 Comments: