அண்ணன் என்னடா தம்பி என்னடா

Saturday, July 11, 2020

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..


தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்

வயிறும் வேறடா

சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்

சொந்தம் என்பதும் ஏதடா..

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..

 

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை

கட்டி வைத்தவன் யாரடா..

அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்

சோறு போட்டவன் யாரடா..

 

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்

வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா..

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..

 

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்

வந்து சேர்கிறார் பாரடா

கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை

மதித்து வந்தவர் யாரடா..

 

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்

பந்தபாசமே ஏனடா..

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள் தானடா.

 

திரைப்படம்: பழநி.

இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி

வரிகள்: கவியரசர் கண்ணதாசன்

பாடியவர்: டி.எம்.எஸ்.


x

0 Comments: