தகப்பன்சாமி

Saturday, July 25, 2020

Pic Courtesy: Internet


வாழ்க்கை எனக்கு இன்னுமொரு வரத்தை அளித்துள்ளது.

இயற்கையின் அருளால், இறையருளால் எங்களின் அன்பின் வெளிப்பாடாய் மகன் பிறந்திருக்கிறான்.

இனி எனக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்கும் இன்னொரு ஆசானாய் வந்திருக்கிறான் என் மகன்.

என் வாழ்வை முழுமையடைய செய்திருக்கிறான். வாழ்க்கையின் அர்த்தங்களை உணர்த்தப் போகிறான். என்னை மென்மேலும் பட்டைத்தீட்டி மிளிர செய்யப் போகிறான்.

எனக்கே குருவாக விளங்கி தகப்பன்சாமியாக விளங்கப்போகிறான்.

* தினேஷ்மாயா *

0 Comments: