ஆயுத எழுத்து...

Tuesday, July 07, 2020



சமீபத்தில் ஐதராபாத்தில் நான்கு பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதை பெரும்பாலானோர் கொண்டாடினர். நீதி நிலை நாட்டப்பட்டது என்றனர். அந்த காவல்துறையினருக்கு மலர்கள் தூவி வாழ்த்தினர்.

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது சட்டப்படி கிடைத்திருக்க வேண்டும். காவல்துறையினருக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லை என்று அன்று சொன்னோம். ஆனால், அன்று காவல்துறையினரின் செயலை மெச்சிய மக்கள்தான் இன்று சாத்தான்குளத்தில் நடத்தப்பட்ட சிறை மரணத்தில் காவல்துறையினருக்கு எதிராக கொதிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு அதிகாரத்தோடு ஆயுதமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதங்கள் மக்களை காக்க பயன்படாமல் மக்களை தாக்கவே அதிகம் பயன்படுவதால் அதிகம் பாதிப்பு அப்பாவி பொதுமக்களுக்கே..

* தினேஷ்மாயா *

0 Comments: