ஆணாதிக்கம்

Monday, June 19, 2017




பல ஆண்களுடன் தன்னை பகிர்ந்துக்கொள்ளும் பெண்ணுக்கு இந்த சமூகம் ஓர் பெயர் வைத்திருக்கிறது..

ஆனால், பல பெண்களுடன் தன்னை பகிர்ந்துக்கொள்ளும் ஆணுக்கு இந்த சமூகம் ஏன் அப்படி எந்த பெயரும் வைக்கவில்லை ?

பெண்ணை காட்சிப்பொருளாக பார்த்தார்கள் முன்னர்.

இன்றோ அவளை வெறும் இச்சைப்பொருளாய் மட்டுமே பார்க்கிறது ஆண்களின் கண்கள் !

பெண்மையின் சிறப்பே தாய்மைதான்.

ஆனால், பெரும்பாலும் ஆண்களின் பார்வை அவளை தாய் ஆக்குவதாகவே இருக்கிறது..

ஆண்களை சாடினால் அவர்கள் சமூகத்தை கை காட்டுகிறார்கள்..

சமூகத்தை சாடினால் அது பெண்ணை கை காட்டுகிறது..

பெண்ணை எப்படி சாடுவது !

பாதுகாப்பு அளிக்க வேண்டிய பெண்களுக்கு பாதுகாப்பைவிட பாதிப்பே அதிகம்..

வக்கிர பார்வை கொண்ட ஆண்கள் திருந்தாமல், பெண்களை திருந்த சொல்லும் இந்த சமூகத்தில்

பெண்ணியம் பேசுவதென்பது 

சூரியனை தண்ணீர் ஊற்றி அணைப்பது போல !

வாழ்க ஆணியம்
வாழ்க ஆணாதிக்கம்

வீழ்க மனித இனம் !!

* தினேஷ்மாயா *

0 Comments: