எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல

Thursday, June 29, 2017




எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே...

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள்
நூறாக வேண்டும் தங்கச் சிலையே
தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
என்னை மறந்தேன் நானம்மா...

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாள் காதல் தேவி...
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே
காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

படம் : சின்னக் கண்ணம்மா 
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
பாடல்வரி: பஞ்சு அருணாச்சலம்



நாம் இப்போது நெல்லையில் இருந்து கோவை நோக்கி பேருந்தில் பயணத்தில் இருக்கிறேன். வழக்கம்போல் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பேருந்தில் இளையராஜா அவர்களின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்னை தாலாட்டிக்கொண்டு வருகிறது. இதோ இங்கே பதிந்திருக்கும் பாடலும் என்னை தாலாட்டிய பாடல்களில் ஒன்று, இருந்தாலும், பாடல் என்னை அவ்வளவு புரட்டிப்போட்டுவிட்டது. பாடல் கேட்ட முதல்முறையே என் உயிரில் கலந்துவிட்டது என்றும்கூட சொல்லலாம். என்னில் அவ்வளவு கலந்துவிட்டது இப்பாடல். அப்பா தன் மகளுக்கு பாடும் பாடல். அப்பாவாக நான் மகளாக எங்களுக்கு பிறக்கும் தேவதையை நினைத்து பாடுவதாய் இப்பாடலை நினைத்துக்கொண்டேன். என்னிடம் இப்பாடல் இல்லை, உடனே பதிவிறக்கம் செய்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன். வரிகள் கண்களில் கண்ணீரை வார்த்துவிட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: