ஸ்ரீ ராமஜெயம்

Friday, June 16, 2017





    என்னுடம் தங்கியிருக்கும் நண்பன், நாளை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம் என்றிருக்கிறேன், வெற்றிலை எங்கே கிடைக்கும் என்றான். எதுக்குடா இப்போ இந்த வேண்டுதல் என்று கேட்டேன். அவன் அக்கா இப்படி செய்ய சொன்னார்களாம், நல்ல வேலை கிடைக்க விரைவில் திருமணம் நடக்க,காரிய வெற்றி கிடைக்க. சரி, நானும் அவனுடன் சேர்ந்து இந்த வேண்டுதலில் ஈடுபடலாமே என்று கிளம்பிச்சென்று, வெற்றிலை வாங்கிவந்து, நாங்கள் இருவரும் எங்கள் கைப்பட 108 வெற்றிலை கொண்டு மாலை கட்டி முடித்தோம். மறந்துவிட்டது எனக்கு, எப்படி கட்ட வேண்டும் என்று. பின் இணையதளத்தில் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டு கட்டிமுடித்துவிட்டேன். இறைவனுக்காக செய்யும் ஒவ்வொரு விஷயமும் காதலுடனும் பக்தியுடனும் செய்யும்போது நாம் இறைவனுக்கு மிக அருகில் செல்வதுபோல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. நாளை அருகில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு இந்த வெற்றிலைமாலையை சாற்றி அவர் ஆசி பெற்று வரவேண்டும்..

* தினேஷ்மாயா *

0 Comments: