மழை !

Saturday, April 22, 2017


அன்று மழைபெய்தபோது நீ குடையுடன் வந்தாய்

என்னையும் குடையினுள் அழைத்தாய்

குடைக்குள் முத்த மழையை பொழிந்தாய்..

முத்தத்தோடு என் கன்னத்தையும் -

அப்படியே விட்டுவிட்டு நடந்தாய்

மழையும் நின்றது உன் முத்த மழையும்தான்..

பின் நானும் உனைநோக்கி நடைப்போட்டேன்..

நீ கொடுத்த முத்தத்தால்

அந்த குடை நாணத்தால் தலைசாய்கிறது பார்..

* தினேஷ்மாயா *


0 Comments: