மறுவார்த்தை பேசாதே

Tuesday, April 11, 2017



மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமைபோல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில்தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழிநீரும் வீணாக
இமைதாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண் ஆனதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத  வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணிகாட்டும் கடிகாரம் 
தரும் வாதை  அறிந்தோம் 
உடை மாற்றும் இடைவேளை 
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம் தானே மறைந்தாய் 
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் என்னும் மலர் கொண்டு 
கடிதங்கள் வரைந்தாய் 
பதில் நானும் தரும் முன்பே 
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி 
சினம் தீருமடி 
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழை காலம்

படம்: எனை நோக்கி பாயும் தொட்டா
வரிகள்: தாமரை
இசை: சிவா
பாடியவர்: சித் ஸ்ரீராம்

* தினேஷ்மாயா *

0 Comments: