என்னுயிரே.. என்னுயிரே..

Sunday, January 04, 2015




என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..

நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்

என்னுயிரே.. என்னுயிரே..
வா அருகே.. சாரிகையே..

நீதானே எங்கும் நீதானே
பாரடியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே அன்பே.. உயிர் ஆதாரமே..

நீதானோ பெண்ணே நீதானோ
பாரதியே சொல்லும் சொப்பனமோ
உன்னாலே கண்ணே உன்னாலே
நான் ஒரு இறகாய் மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய்
மதி மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே

என்னுயிரே.. என்னுயிரே..

படம்: மாலைப்பொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
குரல்: கார்த்திக்

* தினேஷ்மாயா *

0 Comments: