ஆண்களுக்கு கவிதை !

Saturday, January 17, 2015



பெண்களுக்காக மட்டுமே

கவிதை எழுதுகிறேனாம்!

நண்பர்கள் என்னை சாடுகின்றனர்..

ஆண்களுக்கென தனியாக

கவிதை எழுததேவையில்லை..

ஆண் வர்ணிப்பவனாகவும்

பெண் வர்ணிக்கப்படுபவளாகவும்

இருப்பதே எப்போதும் அழகு..

ஆண்களுக்காக கவிதை எழுதினால்

கற்பனையும் வற்றிவிடும்,

வார்த்தைகளும் வற்றிவிடும்..

வற்றாத நதி என்றால் அது எப்போதும்

பெண் தான்..

* தினேஷ்மாயா *

0 Comments: