புத்தம் புது காலை

Sunday, January 04, 2015



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
புத்தம் புது காலை
பொன்னிற வேளை

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ
கனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வழிகூடிடும் சுவைகூடுது
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

படம்: அலைகள் ஓய்வதில்லை / மேகா
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி / அனிதா

* தினேஷ்மாயா *

0 Comments: