ஒரு கல் ஒரு கண்ணாடி

Friday, January 09, 2015



ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்.... ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஓ

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

திமிருக்கு மறு பெயர் நீ தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்லு

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

படம் : சிவா மனசுல சக்தி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா.முத்துகுமார்

0 Comments: