உள்ளதைச் சொன்னா குத்தமில்லை...

Saturday, December 21, 2019


“ஒரு குறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லை - அப்படி
உத்தமனாய் வாழ்ந்தவனை - இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை”

இருக்கும் பொழுதை ரசிக்கணும் - அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் - நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும் ?

நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் - சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன்”

ஆடி ஓடிப் பொருளைத் தேடி....
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்....
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சுவைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாம பொதச்சு வைப்பான்
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் - ஆமா
பொதச்சு வைப்பான்

நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயாக அலையாதே - அது இந்த
நாளில் முடியாதே
நரியைப் போல எலியைப் போல
நடக்கத் தெரிஞ்சுக்கணும் - தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு !
உள்ளம் அழுக்குங்க - அதுலேதான்
உலகம் கிடக்குங்க - இது
உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை.. உள்ளதைச்
சொன்னா குத்தமில்லை...

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம்: கண் திறந்தது

* தினேஷ்மாயா *

3 Comments:

raj antony said...

This video விளக்கம்

தினேஷ்மாயா said...

பட்டுக்கோட்டையாரின் வரிகள் மிகவும் எளிமையானவை. இப்பாடலுக்கு அந்த வரிகளே சிறந்த விளக்கம். மேலும் விளக்கம் தேவையென்றால், குறிப்பிட்டுக் கேளுங்கள். என்னால் முயன்ற விளக்கத்தை உரைக்கிறேன். நன்றி.

Anonymous said...

நன்றி