உடனடி கவிதை !!

Wednesday, December 18, 2019


            நானும் என்னவளும் நடந்து சென்றுக்கொண்டிருந்தோம். அப்போது சில வீடுகளில், மாடி வீட்டிலிருந்து கீழே ஒரு துணிப்பையை கட்டித் தொங்க விட்டிருந்தனர். மேலே இருப்பவர்களுக்கு எந்தவொரு பொருளை சேர்க்க விரும்பினாலும், அதை இந்த பையில் வைத்துவிட வேண்டும். அதை அவர்கள் மேல் வீட்டில் இருந்தபடியே கயிறால் இழுத்து அப்பொருளை எடுத்துக்கொள்வர்.

இந்த காட்சியை கண்டதும் உடனடி கவிதை தோன்றியது. அதை உங்கள் சிந்தனைக்கு சமர்ப்பிக்கிறேன்.

" மாடிவீட்டு மாமியின்
தொப்பைத் தொல்லையால்,
தூக்கில் தொங்கியது துணிப்பை"

* தினேஷ்மாயா *

0 Comments: