அகதி

Friday, June 19, 2015



     எத்தனையோ பதிவுகள் அகதிகளைப்பற்றி எழுதினாலும் அகதிகள் பற்றிய பதிவு என் மனதை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நானும் இந்த உலகத்திற்கு எங்கிருந்தோ வந்த அகதி என்பதாலோ ?

  சில தினங்களுக்கு முன்னர், மியான்மர் நாட்டில் ரோஹிங்யா இன மக்களுக்கு வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் இல்லாததால் அவர்கள் அகதிகளாய் இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாய் செல்வதாக ஒரு செய்திப்படித்தேன். 

    இதில் வருத்தம் என்னவென்றால், அகதிகளாக வரும் மக்களை எந்த நாடும் ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், அகதிகளாக வெளியேறியவர்களுக்கு மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல மனமில்லாமல் வழியிலேயே பலர் தங்கள் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.
உலகம் எவ்வளவோ வேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது, ஆனால் சக மனிதனின் கஷ்டங்களை கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாமல் அப்படி இவ்வளவு வேகமாய் எங்கே செல்கிறது இந்த பொல்லாத உலகம் என்று எனக்கு விளங்கவில்லை. 

* தினேஷ்மாயா *

1 Comments:

அரு.மாணிக்கம் said...

அகதிகள் அகதிகளாக உலகம் ஏற்கவில்லையாயினும்....அகதிகளை பூமி தன்னில் அணைத்துக்கொண்டது...