நறுமண காதலி..

Thursday, November 01, 2012



        சும்மா இருக்கும்போது எனக்கு வந்த யோசனை இது. ஒரு கடைக்கு Perufume- வாங்க செல்கிறோம். அங்கே பல நறுமண பொருட்கள் இருக்கிறது. பலவற்றை நுகர்ந்து பார்த்துவிட்டு, நமக்கு பிடித்த ஒரு நறுமண திரவியத்தை வாங்கி வருகிறோம். அங்கே அவ்வளவு இருந்தும் நாம் வாங்கி வந்ததுதான் அதிகமாய் நம்மை கவர்ந்திருக்கும், அதனால்தான் அதை நாம் வாங்கி வந்திருக்கிறோம். ஆனால், சில நாட்கள் சென்றபிறகு அந்த வாசனை திரவியத்தின் நறுமணம் நமக்கு பழகிப்போய்விடும். அடுத்தமுறை இதை வாங்ககூடாது, வேறொரு திரவியத்தைதான் வாங்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அது நமக்கு புளித்துபோய்விடும் அல்லது சில நேரங்களில் ஏண்டா இதை வாங்கினோம் என்றும் கூட நினைக்க தோன்றும். அதுபோலத்தான் காதலும், ஆயிரம் பெண்கள் இருக்கும்போது அவள் ஒருத்தியைத்தான் மனம் விடாமல் துரத்தும். கிடைக்காவிட்டால் உயிரையும்விட துணிவோம். அவள் கிடைத்தபின்பு, ஏண்டா இவளை காதலிச்சோம், ஏண்டா இவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டோம் என்று தோன்றும். அதுதான் வாழ்க்கை. என்ன செய்றது சொல்லுங்க !!

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: