நீதானே !

Wednesday, May 27, 2015


நீதானே !

அந்த ரயில் பயணத்தில்

என் மனதை திருடியவள்

நீதானே !

ஒற்றை பார்வையில்

உயிரை வருடியவள்

நீதானே !

என்னுள் ஒளிந்த காதலை

எனக்கு அறிமுகள் செய்தவள்

நீதானே !

என்னுள் இருந்த கவிஞனை

தட்டி எழுப்பியவள்

நீதானே !

நட்பா ? காதலா ?

நீயும் குழம்பி என்னையும் குழப்பியவள்

நீதானே !

உனக்கும் எனக்கும் காதலென்று

ஊரெல்லாம் பேசவைத்தவள்

நீதானே !

தெரியாமல் பேசிய ஓர் வார்த்தைக்கு

ஆறு மாதங்கள் பேசாமல் போனவள்

நீதானே !

உன்னை தேடும் ஆசையில்

உன் ஊர் தேடி வரவைத்தவள்

நீதானே !

காரணமே இல்லாமல்

என்னை பிரிந்து சென்றவள்

நீதானே !

* தினேஷ்மாயா *

0 Comments: