முயற்சி..

Wednesday, May 27, 2015




   இறைவன் மீது அளவு கடந்த நம்பிக்கை எனக்கு உண்டு. எல்லாம் அவன் நல்லதாகவே நடத்துவான் என்று எப்போதும் நம்புபவன் நான். ஒரு சிறு பிரச்சனை இரண்டு நாட்களாக என்னை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது..

இறைவனிடம் மனதில் பேசிக்கொண்டிருந்தேன். எப்படியும் அந்த பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று.. 

இன்று அதிகாலை எழுந்ததும், இறைவனை நினைத்து இன்றைய தினம் நன்றாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு, முதலில் அந்த பிரச்சனையை சரிசெய்ய முயன்றேன். அப்போதுதான், அந்த பிரச்சனைக்கான காரணத்தையே கண்டறிந்தேன். காரணம் தெரிந்துவிட்டதால், அதற்கான தீர்வும் உடனே கிடைத்துவிட்டது. வெறும் பத்து நிமிடத்தில் அந்த பிரச்சனை முடிந்துவிட்டது. இறைவனுக்கு நன்றி சொன்னேன். இந்த பிரச்சனையை தீர்த்துவைத்ததற்கு மட்டுமல்லாமல், என்னையே அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்ய வைத்தமைக்காகவும்.

ஆம்.. நம் பிரச்சனையை வெளியில் இருந்து யாரோ ஒருவர் மூலம்தான் இறைவன் தீர்த்து வைப்பான் என்றில்லை. நமக்கான தீர்வை இறையருளோடு நாமோ தீர்க்க முயற்சித்தால், நிச்சயம் அது தீர்ந்துவிடும் என்பதை இன்று புரிந்துக்கொண்டேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: