நீர் இன்றி அமையாது உலகு

Tuesday, May 26, 2015




      நீர் இன்றி அமையாது உலகு - வள்ளுவர் கடவுளை வாழ்த்தியதும் கையில் எடுத்த அதிகாரம் வான்சிறப்பு. அப்படியானால், இறைவனுக்கு அடுத்தது மழை என்பது புரிந்துக்கொள்ள வேண்டும். இன்றைய உலகின் மூன்று பக்கமும் நீர் இருப்பதால், நீரின் அவசியம் எவர்க்கும் புரிவதில்லை. இனி வரவிருக்கும் வருடங்களில் தண்ணீருக்காக உலக யுத்தம் நடக்கும் அபாயம் உள்ளது. போதுமான அளவில் தண்ணீரை பயன்படுத்த இங்கே எவர்க்கும் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுப்பதில்லை. உலகில் 75% நீர் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். அப்படி நீர் இருந்தும், தண்ணீர் இன்றி பலர் இங்கே இறந்திருக்கின்றனர். சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பாருங்கள். அப்படியொரு கருப்பு சரித்திரத்தை நமது சந்ததியினருக்கு நாம் விட்டு செல்ல வேண்டாம். அளவோடு பயன்படுத்தி, தண்ணீரை சேமிப்போம். 
நிலைமை கைமீறி சென்றபிறகு தண்ணீர் சேமிப்பதைவிட, இன்றே துவங்குவோம், தண்ணீர் சேமிப்பை..

* தினேஷ்மாயா *

0 Comments: