அம்மா போல அள்ளிதரும்

Thursday, November 12, 2015



அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

அவ நட்டு வச்ச நாத்த எல்லாம்
கதிராக்குறா
எங்க புள்ளக்குட்டி அத்தனைக்கும்
பசி ஆத்துரா
அவ காயாமத்தான் பச்ச மண்ண
வளமாக்குறா..
வழிகாட்டுறா..

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

எத்தனையோ நாளாக
எண்ணியது ஜோராக
அத்தனையும் கைசேர
வருதே தூரல்..
அக்கா புள்ள அவ போல
அழகான மண்வாசம்
நண்டுசிண்டு விளையாட
விலகாத சந்தோஷம்..
புத்து குள்ள கட்டெறும்பு குடிஏறுதே
அத கண்டுகிட்ட தட்டானும்தான் தடுமாறுதே
வரும் காலம் இனி சோகம் இல்ல
தெளிவாகுதே..
விதிமாறுதே..

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

பட்ட மரம் பூவாக
பள்ளங்குழி மேடாக
கொட்டுகிற ஆகாயம் கொடுக்கும் சாமி
கட்டடங்கள் உருவாக
வாயக்காட்ட அழிச்சாங்க
பட்டிணியில் பல நூறு விவசாயி மறைச்சாங்க
கண்ணக்கட்டி விட்டதுபோல தெரியாமலே
நாம தட்டிக்கிட்டு நிக்கிரோமே புரியாமலே
விவசாயம் மட்டும் இல்லையினா உயிர் ஏதுடா
உலகேதுடா???

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்

அவ நட்டு வச்ச நாட்ட எல்லாம்
கதிராக்குறா
எங்க புள்ளக்குட்டி அத்தனைக்கும்
பசி ஆத்துரா
அவ காயாமத்தான் பச்ச மண்ண
வளமாக்குறா..
வழிகாட்டுறா..

அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்
அம்மா போல அள்ளிதரும் மழைதான்
அவ ஆதாரமா நின்னா இல்ல குறைதான்


படம்: 49 O
இசை: கே
பாடியவர்: ஜெயமூர்த்தி

0 Comments: