உயிரின் உயிரே உனது விழியில்

Saturday, July 18, 2015


உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில் 
தோழி போல மாறுவேன் 
சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் 
தாயை போல தாங்குவேன் 
வேறு பூமி வேறு வானம் 
தேடியே நாம் போகலாம் 
சேர்த்து வைத்த ஆசையாவும் 
சேர்ந்து நாமங்கு பேசலாம் 

அகலாமலே அனுகாமலே இந்த
நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பாதிக்கவா
நிகழ் காலமும் எதிர் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

படம்: தாண்டவம்
இசை: G. V. பிரகாஷ்
பாடியவர்கள்: சத்யபிரகாஷ், G. V. பிரகாஷ், சைந்தவி,
பாடல் வரிகள்: நா.முத்துகுமார்

* தினேஷ்மாயா *

0 Comments: