நல்வழி

Thursday, July 19, 2012




அவ்வையின் “நல்வழி” நூலில் இருந்து எனக்கு பிடித்த ஒரு செய்யுளை இங்கே பதிவு செய்கிறேன். அக்காலம் மட்டுமின்றி இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருந்தும்படி எழுதியிருக்கிறார் அவ்வை. அவ்வையின் பாடல்களையும் நான் படிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி, எனது நீண்ட கால கனவை இன்று முடித்துக்கொண்டேன். அத்தோடு அவ்வையின் பாடல்களை என் வலையில் பதிப்பதில் பெரு மகிழ்ச்சி எனக்கு..

“ பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
  கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
  ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
   பாவிகாள் அந்தப் பணம்”

பாடல் 23, நல்வழி
எழுதியவர்: ஔவையார்



- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: