பிறைத்தேடும் இரவிலே உயிரே

Tuesday, July 03, 2012





பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூடவா..
அழகே இந்த சோகம் எதற்கு
நானுன் தாயுமல்லவா..

உனக்கென்ன மட்டும்
வாழும் இதயமடி..
உயிருள்ளவரை
நானுன் அடிமையடி...


பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீர்க்கும் போதுமா..
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில்
வாழுமின்பம் தெய்வம்
தந்த சொந்தமா...
என் ஆயுள் ரேகை நீயடி..
என் ஆயுள் வேரடி..
சுமை தாங்கும் எந்தன் கண்மனி,
எனை சுடும் பனி..

உனக்கென்ன மட்டும்
வாழும் இதயமடி..
உயிருள்ளவரை
நானுன் அடிமையடி...


பிறைத்தேடும் இரவிலே உயிரே
எதைத்தேடி அலைகிறாய்..
கதைசொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


விழியின் அந்த தேடலும்
அலையும் உந்த நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதிப்போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே..
இதை காதல் என்று சொல்வதா
என் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லுமிந்த பூமியில்
நீ.. வரம் தரும் இடம்...


திரைப்படம்: மயக்கம் என்ன
பாடியவர்: சைந்தவி, ஜி.வி.பிரகாஷ்
இசை: ஜி.வி.பிரகாஷ்
வரிகள்: தனுஷ்.




பல நாட்கள் கழித்து மனதை வருடிச்செல்லும்படியான ஒரு பாடல்.. இசையும், வரிகளும், பாடியவர்களின் இனிமையான குரலும் ஒன்று சேர்ந்து எனை ஏதோ செய்கிறது. இப்போதெல்லாம், எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் கைப்பேசியில் ஒலிக்கும் பாடல் இதுதான்... இணையத்தில் எவ்வளவோ தேடியும் இப்பாடலின் வரிகள் முழுவதையும் எவரும் பதியவில்லை என்பதை  தெரிந்துக்கொண்டு, என் மனதை திருடிய பாடலின் வரிகளை பதிவு செய்யும் வேலையை நானே எடுத்துக்கொண்டேன்..

- என்றும் அன்புடன்


தினேஷ்மாயா

2 Comments:

Unknown said...

சைந்தவியின் குரல் கேட்பவர்களை கட்டித்தான் போடுகிறது. கேட்பவர்கள் வலியை ஆற்றும் சக்தியும் அதிகரிக்கும் சக்தியும் இந்த பாடலுக்கு உண்டு!

Unknown said...

இதே போன்ற இனிமையை
சமீபத்தில் வெளியான ’3, திரைப்படத்தில் வரும் ,, நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்,, மற்றும் ,, கண்ணழகா காலழகா பொன்னழகா பெண்ணழகா,, பாடலிலும் காணலாம்.